எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

மேய்ப்பனின் சத்தத்தை அறிதல்

நான் அமெரிக்காவில் ஒரு பண்ணையில் வசிக்கும் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பருடன் பல மதிய வேளைகளில் சுற்றித் திரிந்து மகிழ்ந்தோம். நாங்கள் காடுகளுக்குள் நடந்துசெல்வோம். குதிரைகளில் சவாரி செய்வோம், பந்தய அரங்கிற்குச் செல்வோம், மாடுகளையும் குதிரைகளையும் பார்ப்பதற்காக தொழுவத்திற்குச் செல்வோம். ஆனால் என் அப்பாவின் விசில் சத்தம் கேட்ட மாத்திரத்தில் நான் என்ன வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அப்படியே வீட்டிற்கு ஓடிவிடுவேன். அந்த சிக்னல் சத்தம் கேட்டால், என் தந்தை என்னை அழைக்கிறார் என்பதை நான் சரியாய் புரிந்துவைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த விசில் சத்தம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 

இயேசு தம் சீஷர்களிடம் தாம் மேய்ப்பன் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஆடுகள் என்றும் கூறினார். “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3). பரிசேயர்களும், வேதபாரகர்களும் கிறிஸ்துவின் சீஷர்களின் அதிகாரத்தை கேள்வியெழுப்பி அவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியபோது, தன்னுடைய அன்பின் சத்தம் மற்றெல்லாருடைய சத்தத்தைக் காட்டிலும் தெளிவாய் கேட்கும் என்று அறிவிக்கிறார். ஆடுகள் அவருடைய (மேய்ப்பனுடைய) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின்செல்லுகிறது (வச. 4). 

நாம் இயேசுவின் குரலைக் கேட்கும்போது கவனமாக இருப்போம். அதை நிராகரிக்கும் மதியீனத்தைத் தவிர்ப்போம். ஏனென்றால் அடிப்படை உண்மை என்னவெனில், மேய்ப்பன் தெளிவாகப் பேசுகிறார், அவனுடைய ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன. ஒருவேளை வேதாகமத்தின் ஒரு வசனத்தின் மூலமாகவோ, விசுவாசியான நண்பரின் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஆவியின் தூண்டுதலின் மூலமாகவோ இயேசு நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார், நாம் கேட்கிறோம்.

ஆபத்தில் தலைக்குனிவு

1892 ஆம் ஆண்டில், காலராவால் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பாளர் தற்செயலாக எல்பே நதி வழியாக ஜெர்மனியின் முழு நீர் விநியோகமான ஹாம்பர்க்கிற்கு நோயைப் பரப்பினார். வாரங்களுக்குள், பத்தாயிரம் குடிமக்கள் இறந்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ராபர்ட் கோச், காலரா நோயானது நீரின் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். கோச்சின் கண்டுபிடிப்பு, பெரிய ஐரோப்பிய நகரங்களில் உள்ள அதிகாரிகளை தங்கள் தண்ணீரைப் பாதுகாக்க வடிகட்டுதல் அமைப்புகளில் முதலீடு செய்யத் தூண்டியது. இருப்பினும் ஹாம்பர்க் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. செலவுகளை மேற்கோள் காட்டி, சந்தேகத்திற்குரிய அறிவியலைக் குற்றம் சாட்டி, அவர்களின் நகரம் பேரழிவை நோக்கிக் கொண்டிருந்தபோது தெளிவான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர்.

பிரச்சனைகளைக் கண்டும் செயல்பட மறுக்கும் நம்மைப் பற்றி நீதிமொழிகள் புத்தகம் நிறைய கூறுகிறது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (27:12). ஆபத்து வருகிறது என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தும்போது, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஏறெடுப்பது தான் பொது அறிவு. துரிதமாய் செல்பட்டால் அதின் போக்கை நம்மால் மாற்றக்கூடும். அல்லது அவர் அளிக்கும் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் நம்மை தயார் செய்துகொள்ளக்கூடும். எதுவுமே செய்யாமல் இருப்பது முட்டாள்தனம். நாம் அனைவரும் எச்சரிக்கை அறிகுறிகளைத் தவறவிடாமல், பேரழிவில் கவனம் செலுத்தி அதை எப்படியாவது தடுக்க முயற்சிக்கலாம். “பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (வச. 12). 

வேதாகமத்திலும் இயேசுவின் வாழ்க்கையிலும், நாம் பின்பற்ற வேண்டிய பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார். நாம் நிச்சயமாக சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி எச்சரிக்கிறார். நாம் முட்டாளாக இருந்தால், ஆபத்தில் தலைகுனிந்து முன்னேறுவோம். மாறாக, அவர் கிருபையால் நம்மை வழிநடத்தும்போது, நாம் அவருடைய ஞானத்திற்கு செவிசாய்த்து பாதையை மாற்றுவோம்.

நமக்கு வேண்டிய ஞானம்

ஜான் எம். பாரி தனது பிரபல புத்தகமான “தி கிரேட் இன்ஃப்ளூயன்ஸா”வில் 1918 காய்ச்சல் தொற்றுநோய் பற்றிய கதையை விவரிக்கிறார். சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பில் இருந்து பிடிபடுவதற்குப் பதிலாக, ஒரு பெரிய பாதிப்பை எவ்வாறு எதிர்பார்த்தார்கள் என்பதை பாரி வெளிப்படுத்துகிறார். முதல் உலகப் போர், நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் அகழிகளில் அடைக்கப்பட்டு, எல்லைகளைத் தாண்டிச் செல்வது, புதிய வைரஸ்களைக் கட்டவிழ்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் அழிவைத் தடுக்க இந்த அறிவு பயனற்றது. சக்திவாய்ந்த தலைவர்கள், போர் மேளங்களை அடித்து, வன்முறையை செயல்படுத்தினர். தொற்றுநோய் நிபுணர்கள், போரின் படுகொலையில் கொல்லப்பட்ட இருபது மில்லியனையும் சேர்த்து ஐம்பது மில்லியன் மக்கள் தொற்றுநோயில் இறந்ததாக மதிப்பிடுகின்றனர்.

நம்முடைய மாம்சீக அறிவானது தீமையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள போதுமான தீர்வல்ல என்பதை நாம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறோம் (நீதிமொழிகள் 4:14-16). நாம் அபரிமிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், குறிப்பிடத்தக்க நுண்ணறிவுகளை திறமையாய் செயல்படுத்தினாலும், நாம் ஒவ்வொருவரையும் காயப்படுத்தக்கொள்வதை நிறுத்தமுடியவில்லை. காரிருளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் துன்மார்க்கரின் பாதையில் நாம் செல்ல முடியாது. நாம் சிறந்த அறிவை பெற்றிருந்தாலும், எதில் நாம் இடறுகிறோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலாது (வச. 19). 

ஆகையினால் தான் நாம் ஞானத்தையும் புத்தியையும் சம்பாதிக்க அறிவுறுத்தப்படுகிறோம் (வச. 5). ஞானமானது, நம்முடைய புத்தியில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. நமக்கு தேவையான மெய்யான தெய்வீக ஞானமானது தேவனிடத்திலிருந்து நமக்கு வருகிறது. நம்முடைய அறிவு எப்போதும் குறைவுள்ளது. ஆனால் நமக்கு தேவையானதை அவருடைய ஞானம் நமக்கு அருளுகிறது. 

அழகான மறுசீரமைப்பு

மகோடோ ஃபுஜிமுரா என்னும் புகழ்பெற்ற கலைஞரின் பிரபல புத்தகமான “கலை ூ விசுவாசம்: இறையியல் ஆக்கம்” (யுசவ ூ குயiவா: யு வுhநழடழபல ழக ஆயமiபெ) என்ற புத்தகத்தில், ஜப்பானியர்களின் தொன்மையான கிண்ட்சுகி மண்பாண்டக்கலையைக் குறித்து விவரிக்கிறார். அதில், கலைஞர் உடைந்த மட்பாண்டங்களை (முதலில் தேநீர் பாத்திரங்கள்) எடுத்து, துண்டுகளை மீண்டும் அரக்குடன் சேர்த்து, விரிசல்களில் தங்கத்தை இழைக்கிறார். “இந்த கிண்ட்சுகி பாத்திரங்கள் உடைந்த பாத்திரங்களை சரிசெய்வதோடல்லாது, அது முன்பிருந்த அழகைக்காட்டிலும் அதிக அழகாய் மாற்றுகிறது” என்று சொல்லுகிறார். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு போர்வீரனின் உடைந்துபோன விருப்பமான கோப்பையை அழகாக மீட்டெடுத்த முயற்சியிலிருந்து இந்த கலை தோன்றியது. பின்னர் இது மிகவும் மதிப்புமிக்க விரும்பமான கலையாக மாறியது.

இந்த வகையான மறுசீரமைப்பை கலைநயத்துடன் தேவன் உலகத்தில் செயல்படுத்துவதை ஏசாயா விவரிக்கிறார். நாம் நமது கிளர்ச்சியால் உடைந்து, நமது சுயநலத்தால் சிதைந்தாலும், தேவன் “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (65:17) என்று வாக்குப்பண்ணுகிறார். அவர் பழைய உலகத்தை பழுதுபார்ப்பது மட்டுமல்லாமல், அதை முற்றிலும் புதியதாக மாற்றவும், நமது உடைந்த வாழ்க்கையை எடுத்து, புதிய அழகுடன் மின்னும் உலகத்தை வடிவமைக்கவும் திட்டமிடுகிறார். மேலும் அந்த புதிய வாழ்க்கையில் “முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு,” “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை” (வச. 16-17). இந்த புதிய சிருஷ்டிப்பின் மூலம் தேவன் நம்முடைய தவறுகளை மூடிமறைக்கப்போவதில்லை; மாறாக, அசிங்கமான விஷயங்களை அழகாகவும், செத்த காரியங்களை மீண்டும் சுவாசிக்கசெய்யும் படைப்பாற்றலையும் கட்டவிழ்ப்பார். 

நம்முடைய சிதைந்துபோன வாழ்க்கையைக் குறித்த நாம் கவலைப்பட தேவையில்லை. தேவன் தன்னுடைய அழகான மறுசீரமைத்தலை செயல்படுத்துகிறார். 

தேவனுடைய காப்பியம்

“லைஃப்” என்ற பத்திரிகையின் ஜூலை 12, 1968 அட்டைப் படத்தில் பயாஃப்ராவிலிருந்து (நைஜீரியாவில் உள்நாட்டுப் போரின் போது) பட்டினி கிடக்கும் குழந்தைகளின் கொடூரமான புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதைக் கண்டு மனஉளைச்சலுக்கு ஆளான ஒரு சிறுவன் அந்த பத்திரிக்கையைக் கொண்டுபோய், சபைப் போதகரிடம் காண்பித்து, “தேவனுக்கு இது தெரியுமா?” என்று கேட்டானாம். “இதை உன்னால் புரிந்துகொள்ளமுடியாது என்பது எனக்குத் தெரியும், ஆனால் இதை தேவன் அறிந்திருக்கிறார்” என்று பதிலளித்தாராம். அப்படிப்பட்ட கடவுள் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் வெளியேறினானாம். 

இந்த கேள்விகள் குழந்தைகளை மட்டுமல்ல, நம் அனைவருக்கும் எழுகிறது. தேவனுடைய ஆச்சரியமான வெளிப்பாட்டின் அறிவுடன், பியாஃப்ரா போன்ற இடங்களில் கூட, தேவன் தொடர்ந்து எழுதும் இதிகாசக் கதையைப் பற்றி அந்தச் சிறுவன் கேட்டிருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். 

இயேசு தங்களை எப்படியாவது காப்பாற்றிவிடுவார் என்று எண்ணி உபத்திரவத்தில் இருந்தவர்களுக்கு இயேசு இந்த கதையைச் சொல்லுகிறார். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” என்று சொல்லுகிறார். ஆனால் இந்த தீமைகள் முடிவல்ல என்று இயேசு அவர்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். ஏனென்றால் அவர் ஏற்கனவே உலகத்தை ஜெயித்துவிட்டார் (16:33). தேவனுடைய கடைசி அத்தியாயத்தில், அனைத்து அநீதிகளும் நியாயந்தீர்க்கப்பட்டு, உபத்திரவங்கள் அனைத்தும் மாற்றப்படும். 

ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும், தேவன் அனைத்து தீமைகளையும் அழித்து எல்லாவற்றையும் சரிசெய்கிறதை நாம் பார்க்கமுடியும். நம்மை அதிகமாய் நேசிக்கிற தேவனை நமக்கு பிரதிபலித்துக் காண்பிக்கிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (வச. 33) என்று இயேசு சீஷர்களுக்குச் சொல்லுகிறார். நாம் அவருடைய சமாதானத்திலும் பிரசன்னத்திலும் இன்று இளைப்பாறுதலடைவோம்.

இயேசு நம் சகோதரர்

ப்ரிட்ஜர் வாக்கருக்கு ஆறு வயது இருக்கும்போது ஒரு வெறிநாய் அவரது தங்கையை கடிக்கும் நோக்கத்துடன் சீறிப்பாய்ந்தது. பிரிட்ஜர் அவளுக்கு முன்னால் குதித்து, நாயின் கொடூரமான தாக்குதலிலிருந்து அவளைக் காப்பாற்றினார். அதினிமித்தம் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிட்ஜரின் முகத்தில் தொண்ணூறு தையல்கள் போடப்பட்டது. ஆனால் பிரிட்ஜரிடம் அவருடைய துணிச்சலைக் குறித்து கேட்டபோது “யாராவது இறக்க நேரிட்டால், அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னாராம். அதிர்ஷ்டவசமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிரிட்ஜரின் முகம் குணமடைய உதவியுள்ளனர். அவர் தன்னுடைய தங்கையை கட்டிப்பிடித்தவாறு எடுத்த சமீபத்திய புகைப்படமானது அவருடைய உறுதியான சகோதர அன்பை இன்னும் வெளிப்படுத்துகிறது.

நம்முடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் நம்மை பராமரித்துக்கொள்வது இயல்பு. உண்மையான சகோதரர்கள் நாம் பிரச்சனையில் இருக்கும்போது நமக்கு தோள்கொடுப்பார்கள்; நாம் பயப்படும்போதோ அல்லது தனிமையில் இருக்கும்போதோ நமக்கு துணைநிற்பார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் பூரணமானவர்கள் அல்ல, சிலவேளைகளில் அவர்களும் நம்மை காயப்படுத்த நேரிடலாம். நமக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் நம்மோடு எப்போதும் இருக்கும் இயேசு. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் சொல்லுவதுபோல, கிறிஸ்து தன்னை தாழ்த்தி “மாம்சத்தையும் இரத்தத்தையும்” உடையவராகி (வச. 14) மாம்ச குடும்பத்தின் அங்கத்தினராய் மாறி, “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு  ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (வச. 17). அதினால் இயேசு நம்முடைய மெய்யான சகோதரராய் மாறினார். நம்மையும் சகோதரர் மற்றும்  சகோதரி என்று அழைக்கிறார் (வச. 11). 

இயேசுவை நாம் இரட்சகர், சிநேகிதர், ராஜா என்று அழைக்கிறோம். அவை அனைத்தும் உண்மையே. இயேசு நம்முடைய சகோதரனாய், மனுஷனுக்குரிய பயங்கள், சோதனைகள், சோர்வுகள், துக்கங்கள் என்று அனைத்தின் பாதை வழியாகவே கடந்துசென்றார். நம்முடைய சகோதரர் எப்போதும் நம் பட்சத்தில் நிற்கிறார்.

பலமுள்ளவைகளும் பலவீனமானவைகளும்

ஐயோவா பல்கலைக்கழகத்தின் கல்லுரிகளுக்கிடையில் நடைபெறும் கால்பந்தாட்டத்தில் மனதைக் கவரும் பாரம்பரியம் அரங்கேறுகிறது. ஸ்டெட் ஃபேமிலி என்னும் சிறுவர் மருத்துவமனை ஒன்று இந்த ஐயோவாவின் கின்னிக் ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக உள்ளது. அந்த மருத்துவமனையில் மேல்தளத்திலிருந்து இந்த ஸ்டேடியத்தின் விளையாட்டை பார்வையிடும்வகையில், உயரமான கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றது. விளையாட்டு நடைபெறும் நாட்களில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் அந்த மேல்தளத்தில் வந்து அமர்ந்துகொண்டு விளையாட்டைக் கண்டு மகிழ்வர். முதல் காலாண்டின் முடிவில், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை பார்வையிடுவர். அந்தச் சில நிமிடங்களில் குழந்தைகளின் கண்கள் ஆச்சரியத்தில் ஒளிரும். டி.வியில் மட்டுமே பார்க்கமுடிந்த இதுபோன்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நேரில் பார்ப்பதும் அவர்கள் தங்கள் மீது அக்கறை காட்டுவதை பார்ப்பதும் அரிதான ஒன்று. 

அதிகாரத்திலுள்ளவர்கள் (நாமெல்லாருக்கும் ஏதோ ஒருவிதத்தில் அதிகாரம் இருக்கிறது), பலவீனமானவர்களைக் கவனித்துக்கொள்ளவும், கஷ்டப்படுகிறவர்களைக் கவனிக்கவும், சரீர பெலவீனம் கொண்டவர்களை பராமரிக்கவும் வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது. இருந்தாலும் அப்படிப்பட்ட தேவையிலுள்ளவர்களை நாம் அவ்வப்போது புறக்கணிக்கிறோம் (எசேக்கியேல் 34:6). எசேக்கியேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் தலைவர்களை அவர்களின் சுயநல சிந்தைக்காகவும், தேவையிலுள்ளவர்களை அலட்சியப்படுத்தியதற்காகவும் கண்டிக்கிறார். “மேய்ப்பருக்கு ஐயோ!... நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும்... அவைகளை ஆண்டீர்கள்” என்று எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களை எச்சரிக்கிறார்.  

நமது தனிப்பட்ட ஆர்வங்கள், தலைமைத்துவ சித்தாந்தங்கள் அல்லது பொருளாதாரக் கொள்கைகள், துன்பத்தில் இருப்பவர்களுக்கு அக்கறைக் காட்டுவதற்கு நமக்கு எந்த அளவிற்கு தடையாயிருக்கிறது? பலமுள்ளவர்கள் பலவீனர்களை நோக்கிப் பார்க்கிற ஒரு பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார் (வச. 11-12).

ஜெபமும், மாற்றமும்

1982 ஆம் ஆண்டில், போதகர் கிறிஸ்டியன் ஃபூரர் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் திங்கட்கிழமை ஜெபக் கூட்டங்களைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக உலகளாவிய வன்முறை, அடக்குமுறை மற்றும் கிழக்கு ஜெர்மன் ஆட்சியின் நடுவிலும் தேவனிடம் சமாதானம் வேண்டி ஒரு சிலர் கூடி ஜெபித்தனர். கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தேவாலயங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த போதிலும், சபை வாசலுக்கு வெளியே வெகுஜனக் கூட்டம் வரும் வரை, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அக்டோபர் 9, 1989 அன்று, எழுபதாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த கலவரத்திற்கும் பதிலடி கொடுக்க ஆறாயிரம் கிழக்கு ஜெர்மன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்நாளை ஒரு  வரலாற்றுத சிறப்பாகவே கருதுகின்றனர். ஒரு மாதம் கழித்து, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது. பெரிய மாற்றம் ஜெபக்கூட்டத்துடன் தொடங்கியது.

 

நாம் தேவனிடம் திரும்பி, அவருடைய ஞானத்தையும், பலத்தையும் நம்பத் தொடங்கும் போது, ​​விஷயங்கள் பெரும்பாலும் மாறவும், மாற்றி அமைக்கப்படவும் தொடங்குகின்றன. இஸ்ரவேலைப் போலவே, "[நம்] துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது," நம்முடைய மிக மோசமான இக்கட்டான நிலைகளை, ஆழமாக மாற்றியமைக்கவும், நம்முடைய மிகவும் வேதனையான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய தேவனை நாம் கண்டு கொள்வோம் (சங்கீதம் 107:28). தேவன் "கொந்தளிப்பை அமர்த்துகிறார்", "அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும்" மாற்றுகிறார் (வச. 29, 35). நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ, அவரே நமக்கு விரக்தியிலிருந்து நம்பிக்கையையும், அலங்கோலத்திலிருந்து அழகையும் கொண்டுவருகிறவர்.

 

ஆனால் தேவன்தான் (அவரது காலத்தில், நம்முடையது அல்ல) மாற்றத்தை ஏற்படுத்துகிறவர். அவர் செய்யும் மறுரூபமாக்கும் பணியில் நாம் எவ்வாறு பங்கு கொள்கிறோம் என்பதே ஜெபம்.

தேவனின் மறக்காத நினைவுகள்

வைத்திருந்தார். ஆனால் அவரால் அதில் ஒரு சதவீதத்தை செலவழிக்க முடியவில்லை. அவருடைய அந்த தொகையை சேமித்துவைக்கும் கருவியின் பாஸ்வேர்டை மறந்துவிட்டார். அதில் சரியான பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்யும் பத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டால், அந்த கருவி தானாகவே அழிந்துவிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவருடைய அதிர்ஷ்டம் அவருடைய கைக்கு எட்டாத ஒன்றாய் மாறிவிட்டது. ஒரு தசாப்தமாக, அவன் அந்த பாஸ்வேர்டை நினைவுகூர முயற்சித்து, மிகவும் வேதனையடைந்தார். அவர் எட்டு முறை பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்து எட்டு முறையும் தோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டில், தன்னிடத்திலிருக்கும் அனைத்தும் மறைந்துபோவதற்கு தனக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது என்று புலம்பினார். 

மறதி, நம்முடைய இயல்பான குணாதிசயம். சிலவேளைகளில் சிறிய காரியங்களை மறக்கிறோம் (சாவியை தொலைப்பது போல), சிலவேளைகளில் பெரிய காரியங்களை மறந்துவிடுகிறோம் (பாஸ்வேர்ட் தெரியாமல் பெரிய பணத்தொகையை இழப்பது). ஆனால் தேவன் நம்மைப் போலில்லை. அவருக்கு பிரியமான காரியங்களையோ அல்லது மக்களையோ அவர் மறப்பதேயில்லை. கடினமான போராட்டங்களுக்கு மத்தியில் தேவன் நம்மை மறந்துவிட்டாரோ என்று இஸ்ரவேலர்கள் அஞ்சினர்: “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” (ஏசாயா 49:14). தேவன் நம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்கக்கூடியவர் என்று ஏசாயா தன் ஜனத்தை எச்சரிக்கிறான். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” என்று தீர்க்கதரிசி கேட்கிறான். ஒரு தாய் தன் பாலகனை மறக்கமாட்டாள். அவளே, மறந்தாலும் தேவன் நம்மை மறப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (வச. 15). 

“இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் நம்முடைய பெயர்களை அவருடைய உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார். அவர் நேசிக்கிறவர்களை அவர் என்றுமே மறப்பதில்லை என்பதை நாம் நினைவில்கொள்வோம்.